Monday, September 15, 2008

வளரும் தமிழகம்

சரித்திரம் தோன்றும் முன்னே, தமிழ்ச் சங்கமும் தோன்றும் முன்னே தனித்துவம் பெற்று தன் பெருமையை உலகெங்கும் பரப்பியது நம் தமிழ்நாடு. இதன் இலக்கிய வரலாறும் அரசியல் வரலாறும் இமயத்தையும் விஞ்சும் பெருமை வாய்ந்தது. இன்றைய சூழலில் மக்கள் மனத்திலாகட்டும் ஆட்சியாளர்கள் மனத்திலாகட்டும் நெஞ்சுக்கு நீதி மறந்து நஞ்சுக் கொடி நாளும் வளர்ந்து வருகிறது. மக்கள் யாவரும் தான் செய்யும் தவறுகளை அறிந்துகொள்ளாமல் தன்னை ஆளும் ஆட்சியினையும் அதில் பங்குள்ள அரசியல்வாதிகளையும் குறைசொல்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இன்றைய சூழலில் நாம் ஒவ்வாருவரையும் குற்றம் குறை குறைகொண்டிருப்பதால் விளையும் பயன் எதுவும் இல்லை. மற்றவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் நேரத்தில் நம்முடைய தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும், அது சரி நாம் செய்வது தவறு என்று தெரிந்தால் தானே திருத்திக்கொள்ள முடியும். இதற்கு தேவை நல்ல ஒரு அரசாங்கம் அரசின் கடமைகளை புரிந்து கொண்டு பணியாற்றும் ஆட்சியாளர்கள், மக்களின் மனதில் நல்ல சிந்தனைகளை தோற்றுவிக்கும் ஊடகங்கள்.

இவையாவும் ஒரு நாளில் நடப்பது சாத்தியமில்லை ஆனால் இளைய தலைமுறையினர் முயற்சித்தால் வெகு விரைவில் நல்ல தமிழகம் உருவாகும். இந்த தலைப்பிற்கு காரணம் தமிழகம் எப்பொழுதும் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும் நமக்கு வானம் கூட எல்லையில்லை என்ற நோக்கோடுதான். அதற்காக நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று என் சிந்தனையில் தோன்றுவதை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்த பதிவுகள். இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை அப்படி ஏதும் தாங்கள் அறிந்தால் தயைகூர்ந்து மன்னியுங்கள்.


தன்னிறைவு கொண்ட நாடு
தரணியையே ஆண்ட நாடு
கல்வியில் சிறந்த நாடு
கலைகள் பல வளர்த்த நாடு
அறிவியல் வளர்த்த நாடு
அறிஞர் பலர் வாழ்ந்த நாடு


பல மன்னர்கள் பெரும்வேந்தர்கள் முறை தவறாமல் பன்னெடுங்காலம் ஆட்சி செய்து வளப்படுத்திய தமிழகம் இன்றைய நிலையில் இருந்து மாறி உலக அரங்கில் தனிச்சிறப்புடன் திகழ நாம் என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதனை இங்கே தொடர்ந்து காணலாம்.

No comments: