Thursday, July 31, 2008

நேற்றைய மன்னராட்சி

வற்றாத நதிகளும் பொய்யாத வானமும்

மக்களை காக்கும் மன்னரும்

மன்னரை போற்றும் மக்களும்

வளையாத செங்கோலுடைய அரசனும்

வீரமும் நேர்மையும் கொண்ட குடிகளும்

வரிகளெல்லாம் வளம்கொடுக்கும்

வேளாண்மை உயிர் வளர்க்கும்

வாள்வில்வேல் உயிர் காக்கும்

வாழ்வில் இன்பம் செழிக்கும்

சுற்றம் நட்புடன் கூடி மகிழும்

சுகங்கள் யாவும் கொட்டிகிடக்கும்

போரென உள்ளம் மகிழ்ந்திடும்

தோல்வி மட்டும் கசந்திடும்