வற்றாத நதிகளும் பொய்யாத வானமும்
மக்களை காக்கும் மன்னரும்
மன்னரை போற்றும் மக்களும்
வளையாத செங்கோலுடைய அரசனும்
வீரமும் நேர்மையும் கொண்ட குடிகளும்
வரிகளெல்லாம் வளம்கொடுக்கும்
வேளாண்மை உயிர் வளர்க்கும்
வாள்வில்வேல் உயிர் காக்கும்
வாழ்வில் இன்பம் செழிக்கும்
சுற்றம் நட்புடன் கூடி மகிழும்
சுகங்கள் யாவும் கொட்டிகிடக்கும்
போரென உள்ளம் மகிழ்ந்திடும்
தோல்வி மட்டும் கசந்திடும்